108 ஆம்புலன்ஸ் பொறுப்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு
Posted on September 4th, 2010 at 06:47 AM and last modified on September 5th, 2010 at 8:57 am.
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் மனைவி பாப்பாத்தி(25).இவர் ரெட்டியார்சத்திரம் பகுதிக்கான 108 ஆம்புலன்சில் பணிபுரிந்து வந்தார்.
இவர் அசிங்கமாக பேசி, பாலியல் தொந்தரவு செய்து, பணம் கேட்டு மிரட்டியதாகவும், நோயாளிகளின் விருப்பத்திற்கு மாறாக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்ததாக மேலதிகாரிகளிடம் கூறி வேலை விட்டு நீக்கி விடுவேன் என்று மிரட்டியதாக 108 ஆம்புலன்ஸ் மாவட்ட பொறுப்பாளர் குமரன் மீது ரெட்டியார்சத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் குமரன் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இதற்கிடையில் புகார் கூறிய பாப்பாத்தி, 108 ஆம்புலன்ஸ் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய் யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source:Dinamalar




News Archives